பிரபல பாப் பாடகி லேடி காகாவின் நாய்க்கு ஆசிய நாடுகள் தடை விதித்துள்ளன. லேடி காகா இம்மாதம் ஆசியாவின் பல இடங்களில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும்போது அவருடைய நாயை அவர் உடன் அழைத்து வரக்கூடாது என தடை விதித்துள்ளன. இந்த தடைக்கு லேடிகாகா தனது நாய்க்கு 'ஆசியா' என்ற பெயரை வைத்ததுதான் காரணம். உலகப்புகழ் பெற்ற 28 வயது பாப் பாடகி லேடிகாகா, சமீபத்தில் பிரெஞ்ச் நாட்டில் இருந்து விலையுயர்ந்த நாய் ஒன்றை விலைக்கு வாங்கி வளர்த்து வருகிறார். இந்த நாய்க்கு அவர் ஆசியா என்ற பெயரிட்டுள்ளார். இதற்கு ஆசிய நாடுகள் கடும் கண்டங்கள் தெரிவித்தனர். ஆனால் அவற்றையெல்லாம் லேடிகாகா பொருட்படுத்தவில்லை. இம்மாதம் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் டோக்கியோவிலும், 16ஆம் தேதி தென்கொரியாவின் சியோல் நகரத்திலும் லேடிகாகாவின் நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயாராகி வரும் லேடிகாகா, தனது நாயையும் அவர் தனது நடன நிகழ்ச்சியின்போது அழைத்து செல்ல விரும்பினார். ஆனால் லேடி காகாவின் நாய் ஆசியாவின் எந்த நாட்டிற்கு நுழைய அனுமதி இல்லை என்று நிகழ்ச்சி தயாரிப்பாளர் அவரிடம் கூறிவிட்டதால் அவர் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.

Post a Comment

 
Top